தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக
காணியிலே வைத்த பயிர்
காளையாக நிமிர – பொலிக்
காளையாக நிமிர
காடு கரை வீடு எல்லாம்
கதிரவனால் ஒளிர
கரையுடைத்து ஓடும் வெள்ளம்
அணைகளிலே மூழ்க – பெரு
அணைகளிலே மூழ்க
கவலைகளை மறந்து மக்கள்
களிப்பினிலே மூழ்க
வரப்புயர நெல்லுயரும்
வட்டிக் கடன் குறையும்
வட்டிக் கடன் குறையும்
வாழ வந்த பெண்களுக்கு
தங்கம் கழுத்தில் நிறையும்
கரும்பின் அடி இனிப்பு போல
காதல் வாழ்வில் மகிழ -மக்கள்
காதல் வாழ்வில் மகிழ
பசி பிணி பட்டினிகள்
சாதல் கண்டு மகிழ
பொங்க வேண்டும் இன்பமெலாம்
பசுவைக் கண்ட கன்றாய் – தாய்ப்
பசுவைக் கண்ட கன்றாய்
மங்க வேண்டும் துன்பமெல்லாம்
மாரி கண்ட கன்றாய்
தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக
Like this:
Be the first to like this பதிவு.
கருத்துத் தெரிவிக்கவும்
AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், பொங்கல், DANIEL'S THOUGHTS, mannar amuthan, TAMIL KAVITHAIKAL இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், இலக்கியம், ஈழம், கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், பொங்கல் கவிதை, மன்னார் அமுதன், Daniel's thought, mannar amuthan
மறுமொழிந்தவர்கள்