இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு – 2 எதிர்வரும் 13 ம் திகதி தேசிய கலை இலக்கியப் பேரவையில், (வெள்ளவத்தை) இடம்பெற இருக்கின்றது. இச் சந்திப்பிலே பல விடயங்கள் இடம்பெற இருக்கின்றன. இலங்கையின் அனைத்துத் தமிழ் வலைப் பதிவர்களும் அன்றைய தினம் ஒன்றாகச் சந்திப்போம்.

சந்திப்பு தொடர்பான விபரங்களைத் தருகின்றேன்….

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கிற்கு முன் ஒழுங்கை)

காலம் : டிசம்பர் 13 (தமிழ் கார்த்திகை 27) , மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்

பதிவர்கள் தங்கள் வருகையை அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

amuthan எழுதியவை | நவம்பர்23, 2009

நீ… தோழனா !

பாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி

பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு

வாசமென்றால் என்னவென்று அறியா நீமூடா – என்

வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா

*
*

ஊனன் கண்ட கனவு மெய்க்க

உடலை வருத்தி உழைத்தோம்

உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை

உதறுகையில் திகைத்தோம்

*
*

பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா

வாழ்க்கையென்று நினைத்தோம்

பாசத்தோடு அரவணைத்து – உன்

வேசங்களை மறைத்தோம்

*
*

கருத் துரைக்க அழைத்திடுவாய்

மறுத் துரைத்த தில்லை

மறந்து போன நாட்களுண்டு; மனம்

மரத்துப் போன தில்லை

*
*

ஆசுகவி உரைத்த வர்கள்

கொண்ட தில்லை பட்டம்

ஆறுகவி புனையு முன்னே

உரைக்கிறாய் நீ சட்டம்

*
*

தோழமைக்கு நல்ல சான்று

கொடுப்ப தில்லை உயிரை

தோழனுக்கு தோழனாக

வாழ்வதே எம் வலிமை

பழைய பதிவுகள் »

வகைகள்