பாட்டையா ஒரு
விதை விதைத்தார்
மந்தையில்
ஆலவிதையாயினும்
நல்லு மரமாய் வளர்ந்தது
பாட்டையாவின் பெயரோடு
ஊரார் ஓய்வெடுக்கவும்
ஒன்றுகூடவும்
உதவியது நல்லுமரம்
விழுதுதுகள் எழுகையில்
வயோதிபர்களின்
வேடந்தாங்கலாகியிருந்தது
அப்பா அதைச் சுற்றி
திண்ணை கட்டினார்
ஆடுபுலி ஆட
ஏதுவாயிருந்தது
ராசாதிண்ணை
ஆல் வேரற்றிருக்கையில்
நாகரிகம் அறிந்திருந்தேன்
நல்லுமரத்தை
விழுதுகள் தாங்கிக்கொண்டன
பாட்டையாயும் அப்பாவும்
பாரமாயிப் போயினர்
எனக்கு
இப்போதெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
–மன்னார் அமுதன்
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
By: yarlpavanan on ஒக்ரோபர்26, 2014
at 9:19 பிப