பரம்பு மலை பாரி வந்திருந்தான்
ஓமோம் …. அவன் தான் …
முல்லைக்குத் தேர் கொடுத்தவன்
அட்டைக்குதிரையும் தேருமாய்
வாகனத்தில் வந்திருந்தான்
வஸ்திரமெங்கும் வைரமாய் ஜொலிக்க
வியர்வையில் வழிந்தோடிக் கொண்டிருந்தது
வரையப்பட்ட மீசை
அமைச்சரின் வருகைக்காய்
தார்ச்சூடு தாங்காமல்
ஒற்றைக் காலில்
ஒளவையும் வள்ளுவனும் பாரதியும்….
வயிற்றுப் பசிக்காய்
வரிசையில் நிற்கையில்
கபிலன் வந்து
காணி கேட்கிறான்
எழிலன் வந்து
ஈழம் கேட்கிறான்
ஆறுதலாய் பதில் சொல்லி
அனுப்பி வைத்த பாரியிடம்
அமைச்சர் வந்து
கை கொடுத்தார்…..
கொடுத்தான்
காசு கொடுத்தார்
வீசி எறிந்தான்
அவன் பாரி தான்….
============ மன்னார் அமுதன்
on web: http://thazal.com/archives/1246
மறுமொழியொன்றை இடுங்கள்